பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !

0
கன்னியா குமரியில் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்



கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர் இருதய தாசன் (58) மீனவரான இவர், தனது மூத்த மகனின் 8 வயது மகளுடன், அப்பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளை கீழமணக்குடி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு விளையாடிய சிறுமிகள் மூவரில், தனது பேத்தியை தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வீட்டுக்கு பட்ஜெட்டுக்குள் உலோக அலங்காரம் செய்ய !
கடந்த 2016 -ம் ஆண்டு, ஜனவரி 2ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர்.

அதன் பேரில் போக்சோ சட்டம், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருதய தாசனை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 




இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருதய தாசன் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டதால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 
அத்துடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings