எச்1-பி விசா முறைகேட்டில் 4 இந்தியர்கள் கைது !

0
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த விஜய் மனோ (வயது 39), வெங்கட்ரமணா மனனம் (47), பெர்னாண்டோ சில்வா (53) மற்றும் கலிபோர்னியா வை சேர்ந்த சதீஸ் வெமுரி (52) ஆகிய 4 பேரும் இணைந்து 2 ஐ.டி. நிறுவனங் களை நடத்தி வருகின்றனர்.
எச்1-பி விசா முறைகேட்டில் 4 இந்தியர்கள் கைது



இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் 4 பேரும் ‘எச்1-பி’ விசா திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது, ரகசிய விசாரணை யின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. 

அதாவது, இவர்கள் தங்களின் நிறுவனங் களுக்கு ‘எச்1-பி’ விசா மூலம் ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்திக் கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்து க்கு மாற்றி விடுவார்கள்.
இந்த மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம் இது தொடர்பாக வழக்கு விசாரணை நியூஜெர்சி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதில் அவர்கள் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2½ லட்சம் டாலர்கள் (ரூ.1 கோடி யே 72 லட்சம்) அபராதமும் விதிக்கப் படலாம் என தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings