சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு !

0
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழி என்ற இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி தானும் தற்கொலை க்கு முயன்றுள்ளார். இன்று இரவு சுமார் 8 மணிக்கு, சேத்துப்பட்டு ரயில் நிலைய பிளாட்பாரத்தில், தேன்மொழி (25) என்ற பெண் எழும்பூர் செல்வதற் காக காத்திருந்தார். 
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு



அப்போது, இளைஞர் ஒருவர் தேன்மொழி யின் தாடையில் அரிவாளால் வெட்டி யுள்ளார். பின்னர் ரயில் முன் பாய்ந்து அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விசாரணையில், தேன்மொழி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், எழும்பூரில் உள்ள விடுதியில் தங்கி யுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 
சேத்துப்பட்டில் பணிபுரிந்து வரும் அவர், பணி முடிந்து விடுதிக்கு செல்லும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், அந்த இளைஞர் பெயர் சுரேந்தர் என்பதும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல் துறையினர் தெரிவிக் கின்றனர். 

படுகாயமடைந்த இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு சுவாதி என்ற இளம்பெண் நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிகொலை செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)