மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி !

0
யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக் காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப் பொருள் பெற்றதாகவும், எதிர்க் கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமர்



இது தொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ள தாகவும், அவர் ஊழலில் ஈடு பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித் திருந்தனர்.
வழக்கு எண் 1000 எனப்படும் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சில சலுகை களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமை யாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிட மிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும், பிரதமருக் கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ஆட்கள் இருந்தும் மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை பிரபல உணவ கங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டது தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.



இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக் கொண்ட தாலும், குறைந்த பட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல் (சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம் நகர மாஜிஸ்திரேட் அவிட்டால் சென் தீர்ப்பளித்தார். 
மேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணமான 45 ஆயிரம் ஷெக்கல் களை அரசு கருவூலத்தில் செலுத்து மாறும் உத்தரவிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings