பசியால் உயிரிழந்த 300 காட்டெருதுகள் !

0
டிசம்பர் 2018-ம் ஆண்டு கடும் பனிப்பொழிவு காரணமாக முகுந்த்நாக் மற்றும் யும்தாங்கில் சிக்கிக் கொண்ட 300 காட்டெருதுகள் உயிரிழந் துள்ளன என வடக்கு சிக்கிம் மாஜிஸ்திரேட் ராஜ் யாதவ் கூறியுள்ளார். முகுந்த்நாக் பகுதியில் 250 எருதுகளும், யும்தாங்கில் 50 எருதுகளின் சடலமும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. 
பசியால் உயிரிழந்த காட்டெருதுகள்


கடந்த டிசம்பரில் இருந்து பனிப்பொழிவு காணப்பட்ட தால் அங்கிருந்து செல்ல முடியாமல் எருதுகள் பசியால் உயிரிழந்து உள்ளன என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை யடுத்து விலங்கு களுக்கு நல ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். இப்போது உயிருடன் இருக்கும் விலங்கு களுக்கு உணவு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. 

இந்த எருந்துகள் அங்குள்ள 25 குடும்பத்தை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. எருதுகளில் பால் கறக்கும் அவர்கள் பனிப்பொழிவின் போது கவனம் செலுத்துவது கிடையாது என குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இதற்கிடையே பனிப்பொழிவு காரணமாக விலங்கு களுக்கு உணவு பொருட்களை வழங்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப் படுகிறது. 

ஹெலிகாப்டர்கள் மூலமாக பயணம் செய்ய வானிலை மோசமானதால் முடியாமல் சென்றது என தெரிவிக்கப் பட்டுள்ளது. விலங்குகள் சிக்கி யிருக்கும் பகுதிக்கு 5 கிலோ மீட்டர் சாலையில் படர்ந்துள்ள பனியை அகற்ற வேண்டிய நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings