கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்த முயன்றவர் !

0
நம் வீட்டிற்குள் கரப்பான் பூச்சி நுழைந்து விட்டால் என்ன செய்வோம். கரப்பான் பூச்சியை டப்புனு அடிச்சி, சட்டென வெளியில் எறிந்து விடுவோம். 
கரப்பான் பூச்சிக்கு பயந்து

கரப்பான் பூச்சி பிரச்சினை, ஆஸ்திரேலியா வின் குயின்ஸ் லாண்ட் நகரில் வேறு விதமாக வெடித்திருக்கிறது. 


தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த கரப்பான் பூச்சியை கொல்வதாக நினைத்து, வீட்டையே கொளுத்த முயன்றிரு க்கிறார், ஆபெல் ஸ்மித்.

சம்பவத்தன்று குயின்ஸ் லாண்ட் நகர தீயணைப்பு படையினரு க்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. “சார், சீக்கிரம் வாங்க. 

என்னுடைய வீட்டில் குண்டு வெடிச்சிருச்சி” என்று அரை குறையாக பேசி, தீயணைப்பு துறையை அலற விட்டிருக்கிறார், ஆபெல். என்ன ஆச்சோ..? ஏது ஆச்சோ..? என பெரும் படையோடு ஆமெலின் வீட்டிற்குள் நுழைந்தி ருக்கிறது தீயணைப்பு படை.

“வீட்டின் வெளித்தோற்றம் மாறு பட்டிருந்தது. வீட்டிற்குள் குண்டு வெடித்ததை போன்றே ஜன்னல் பகுதிகள் உடைந்திருந்தன. 

அதனால் வீட்டின் வெளியே, ஒரு குழுவை பாதுகாப்பிற்கு நிறுத்தி விட்டு, நாங்கள் 4 பேர் மட்டும் ஆபெலின் வீட்டிற்குள் நுழைந்தோம். 

வீட்டின் ஹால் பகுதியின் ஒரு மூலையை பார்த்து பயந்தப்படி, ஆபெல் உறைந்து போய் இருந்தார். அந்த மூலையில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தோம்.


ஒரு கரப்பான் பூச்சியும், தீ பிடித்திருந்த சோபா செட்டுகளுமே இருந்தன. வீட்டின் சுவரில் கரும்புகை படிந்திருந்தது. 

என்ன நடந்தது என்ற விஷயத்தை சொன்னால் நீங்களே சிரித்து விடுவீர்கள்” என்று பேசிய தீயணைப்பு வீரர் மாத்யூ, 

ஆபெல்லை அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்ததோடு மீதி கதையை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள அறிவுறுத்தினார். ஆபெல்லும் பாவமாய் சொல்கிறார்:

“கரப்பான் பூச்சி என்றாலே எனக்கு பயம். அப்படி இருக்க அன்று டி.வி. பார்த்துக் கொண்டிருக்கையில், டி.வி.யின் மேல் ஒரு கரப்பான் பூச்சி இருந்தது. 

அதை தொடாமல் விரட்ட எண்ணினேன். கரப்பான் பூச்சியை கொல்லும் ஸ்பிரேவை பயன்படுத் தினேன். பயனில்லை. அதனால் நெருப்பு ஸ்பிரேவை பயன்படுத்த எண்ணி, டி.வி. கண்ணாடியை சூடுபடுத்தி விட்டேன். 

அதனால் டி.வி.பெட்டி வெடித்ததோடு, என் கையில் இருந்த கரப்பான் பூச்சி ஸ்பிரேவும் வெடித்து விட்டது” என்கிறார், அப்பாவி ஆபெல். 


இதில் என்ன கொடுமை என்றால், இவரை முதலுதவிக் காக சேர்த்திருக்கும் மருத்துவ மனையில் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருக்குமாம். 

அதனால் இன்னும் எதை எல்லாம் கொளுத்த போகிறாரோ..? என்று பயத்தில் உறைந்திருக் கிறார்கள், தீயணைப்பு வீரர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)