25 ஆண்டுகளுக்கு பின் இலங்கை வந்த தமிழரின் சடலம் !

0
இலங்கையில் உள்ள சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(49). இவர் கடந்த 1983ம் ஆண்டு வேலை செய்வதற் காக இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். 
25 ஆண்டுகளுக்கு பின் இலங்கை வந்த தமிழரின் சடலம்

அங்கு பணிப்புரிந்த அவர், 1994ம் ஆண்டு மே மாதம் உடல் நலக்குறைவி னால் உயிரிழந்தார். இலங்கையில் அந்த சமயம் போர் தீவிரமாகி யிருந்தது. இதனால் ஸ்டீபனின் சடலத்தை தாய்நாட்டிற்கு எடுத்து வர இயல வில்லை. 

இதை யடுத்து அங்கிருந்த அவரது உறவினர்கள் இத்தாலி அரசிடம், இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து எடுத்துக் கூறி அங்கேயே பதப்படுத்தி வைக்க அனுமதி பெற்றனர்.

இந்த தகவலை, இலங்கையில் போர் சூழல் சற்றும் குறையாததால் ஸ்டீபனின் குடும்பத்தினருக்கு கூறவில்லை. கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. குடும்பத்தினருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.

அப்போது ஸ்டீபனின் குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தனர். இதனால் ஏற்படும் சட்ட சிக்கல்களை சமாளிக்க முடியாத தால் உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர இயல வில்லை.

இந்நிலையில் ஸ்டீபன் இறந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன் தினம் சாவகச்சேரி க்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது. 

உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சாவகச்சேரி யில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings