கன்னியாகுமரியில் 60 சதவீத மீனவர்களின் ஓட்டுரிமை ரத்து !

0
கன்னியாகுமரி அருகே தூத்தூர் கடற்கரையை சேர்ந்த 60 சதவீத மீனவர்களின் ஒட்டுரிமை ரத்தான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட தூத்தூர் கடற்கரையை சேர்ந்த ஆயிரத்து க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு செய்ய சென்றனர். 
மீனவர்களின் ஓட்டுரிமை ரத்து !


அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மீனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி, அவர்களை வாக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த மீனவர்கள், நாங்கள் அனைவரும் முந்தைய தேர்தலில் வாக்களித்தோம். இந்த முறை 40 சதவீத மீனவர்களுக்கு தான் ஓட்டுரிமை வழங்கப் பட்டுள்ளது. 

எனவே 60 சதவீத மீனவர்களுக்கு உடனே வாக்குரிமை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி உதயகுமரை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு வந்த நித்திரவிளை காவல் நிலைய ஆய்வாளர் ராஜையும் முற்றுகை யிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

60 சதவீத மீனவர்களின் ஒட்டுரிமை ரத்தான சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings