இலங்கையில் இதுவரை 359 பேர் உயிரிழப்பு - பாதுகாப்பு அமைச்சர் !

0
இலங்கை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ள தாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தி யாளர்களை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான், இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 359 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
இலங்கையில் இதுவரை 359 பேர் உயிரிழப்பு


இதில் 39 பேர் வெளி நாட்டினர் என்றும் 17 பேரில் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். குண்டு வெடிப்புத் தாக்குதல் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். 

இந்நிலையில் கொழும்பு அருகே வெள்ளவத்தை பகுதியில் நின்ற மோட்டர் சைக்கிளில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதை யடுத்து வெடிகுண்டை அப்புறப் படுத்திய நிபுணர்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதனை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings