துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய் !

0
நாகை மாவட்டத்தில் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து தாயும் விஷம் குடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நகை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் கடந்த மாதம் 27ம் திகதி சாலை விபத்தில் பலியாகினார். 
துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்த தாய்


இவருக்கு அகிலாதேவி என்ற மனைவியும் ஹர்ஷா என்ற 3 வயது மகளும் உள்ளனர். கணவர் இறந்ததி லிருந்து இருவரும் சோகமாகவே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அகிலா தன்னுடைய காதில் விஷத்தை ஊற்றிக் கொண்டும், மகளுக்கு விஷத்தை குடிக்கவும் கொடுத்துள்ளார்.

இருவரும் ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுவதை பார்த்த வீட்டார், அதிர்ச்சி யடைந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின், தன்னுடைய கணவன் இல்லாத நிலையில் தனக்கு வாழ விருப்ப மில்லை எனவும், மகள் கஷ்டப்படக் கூடாது என்பதற் காக விஷம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)