9 நிமிடத்தில் 6 குழந்தை - உலகில் ஒரு முறை நிகழும் அதிசயம் !

0
அமெரிக்கா வின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை களைப் பெற்றுள்ளார். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். தெல்மா சியாகா என்ற பெண், பிரசவத்துக் காக டெக்சாஸில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். 
9 நிமிடத்தில் 6 குழந்தை


அவருக்கு சில தினங்களு க்கு முன் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள், அதாவது 9 நிமிடங் களுக்குள் ஆறு குழந்தைகளும் அடுத்தடுத்து பிறந்துள்ளன. 'குழந்தைகள் 790 முதல் 850 கிராம் எடையில் இருக்கின்றனர். அனைவரும் நலமாக உள்ளனர். 

இருந்தாலும் அனைத்துக் குழந்தைகளும் பச்சிளங் குழந்தைகளுக் கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர்' என்று மருத்துவ மனை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே, இரண்டு பெண் குழந்தைகளு க்கும் ஸினா, ஸுரியல் என்று பெயர் வைத்துள்ளார் தாய் தெல்மா. 

மீதமுள்ள நான்கு ஆண் குழந்தைகளு க்கும் என்ன பெயர் வைப்பது என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம். ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறப்பது என்பது 490 கோடி பிறப்புகளுக்கு ஒரு முறை நிகழ வாய்ப்புள்ளது என்பது கூடுதல் தகவல்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)