இந்திய விமானியை விடுவிக்க சம்மதம் கூறிய இம்ரான் !

0
இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிப்ப தாக பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். 
இந்திய விமானியை விடுவிக்க சம்மதம் கூறிய இம்ரான்


முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால், இந்திய விமானியை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவெடுக் கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித் திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மேலும் பெரிதுப் படுத்த விரும்ப வில்லை என்றும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொலைபேசி வாயிலாக நேற்று பேச முயற்சி செய்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித் துள்ளார்.

இதன் மூலம் நாங்கள் பயந்து விட்டோம் என்று எண்ணிவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லெண்ண அடிப்படை யில் எவ்வித நிபந்தனையு மின்றி இந்திய விமானியை இன்று விடுவிப்போம் என்றும் அவர் கூறி யுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கர வாதிகள் முகாமை அழித்தது. இதை யடுத்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங் களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. 


இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன், பாகிஸ்தான் ராணுவத் தால் சிறை பிடிக்கப் பட்டார். இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியான சூழலை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த சீனாவும், 'ஒரு நாட்டின் இறை யாண்மையை மதித்து நடந்து கொள்ள வேண்டும்' என்றது. இதை யடுத்து தான், இந்திய விமானியை விடுவிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.
வீடியோ
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings