ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து 93 பேர் பலி !

0
ஈராக்கில் மோசூல் நகரம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் நாட்டின் மோசூல் நகரிலுள்ள சுற்றுலாத் தலமான தீவுக்கு செல்வதற் காக 80க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 150 பேர் சுற்றுலாப் படகில் திக்ரிஸ் ஆற்றில் சென்றனர்.
ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து


சில தினங்களுக்கு முன்பு அணைகள் திறக்கப் பட்டதால் ஆற்றில் கூடுதலான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது திடீரென படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. எச்சரிக்கையை மீறி அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் தான் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. 

ஆற்றில் விழுந்த பயணிகள் உயிருக்காக தத்தளித்தனர். அவர்களை மீட்க உடனடியாக யாரும் வராத நிலையில் இந்த விபத்தில் 93 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்ட பலரது நிலைமையும் கவலைக் கிடமாக உள்ளது. இதனால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings