அவமானத்தால் கூனிக்குறுகினேன் அத்தையைக் கொன்ற மாணவன் !

0
அத்தை தமிழ்ச் செல்வியின் ஒவ்வொரு செயல்பாடு களும் எனக்கு ஆரம்பத்தி லிருந்தே பிடிக்க வில்லை.இதனால் தான் அவரைக் கொலை செய்து விட்டு `பாபநாசம்' படபாணியில் தைரியமாக போலீஸிடம் பொய் கூறினேன்' என்று மாணவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. 
அத்தையைக் கொன்ற மாணவன்


இவர் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி தமிழ்ச் செல்வி. இவரும் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்களின் மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2-ம் தேதி படுக்கையறையில் கை நரம்பு வெட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார் தமிழ்ச்செல்வி. 

இது குறித்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் விசாரணை நடத்தி, சங்கரசுப்புவின் தங்கை மகனான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவக்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தமிழ்செல்வி மரணமடைந்த தகவல் கிடைத்ததும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம். அப்போது, நாய் வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. முதலில் தமிழ்ச் செல்வியின் மரணத்தை சந்தேகம் என்று கருதினோம். 

விசாரணை யிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் தமிழ்ச் செல்வியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். கைதான மாணவனிடமும் விசாரித்தோம். அப்போது அவர் எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது, மாணவன், தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு செல்லும் காட்சிகள் பதிவாகி யிருந்தன. அது தொடர்பாக மாணவனிடம் விசாரித்த போது சுத்தியல் வாங்கச் சென்றதாகக் கூறினார். இருப்பினும் மாணவன் மீது எங்களுக்குச் சந்தேகம் வலுத்தது. 

தொடர்ந்து மாணவனிடம் தனியாக விசாரித்த போது தான் அவன் உண்மையை ஒத்துக் கொண்டார். அதன்பிறகு அவனைக் கைது செய்து கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளோம்" என்றனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `தமிழ்ச் செல்விக்கும் மாணவனு க்கும் ஆரம்பத்தி லிருந்தே பிரச்னை இருந்து வந்துள்ளது. 

அதாவது, மாணவன், அடிக்கடி தமிழ்ச் செல்வியின் வீட்டில் தான் இருப்பார். அப்போது,` எதற்கு பொம்பளைப் பிள்ளை மாதிரி வீட்டுக்குள்ளே இருந்து டிவி பார்த்துக் கொண்டிருக் கிறார்' என்று கூறுவதோடு, டிவி ரிமோட்டையும் தமிழ்ச்செல்வி பிடுங்கி யிருக்கிறார். அடுத்து தன்னுடைய மகளிடம் சிவக்குமார் பேசுவதையும் தமிழ்ச் செல்வி விரும்பவில்லை. 

இதனால் அத்தையின் மீது வெறுப்பில் இருந்துள்ளார் மாணவன். இந்தச் சமயத்தில் தான் `பாபநாசம்' படத்தை மாணவன் பார்த்துள்ளார். அதில் நடிகர் கமல்ஹாசன், படத்தில் கொலையை மறைக்க போலீஸாரிடம் பயப்படாமல் தப்பிக்கும் காட்சிகள் இடம் பிடித்திருக்கும். 

மேலும், ஒருவரின் உயிர், அவரின் கை நரம்பில் இருக்கும் என்பதை பாடத்தில் படித்த மாணவன், சம்பவத்தன்று தமிழ்ச் செல்வியின் கழுத்தை நெரித்து விட்டு அவரின் இடது கை மணிக்கட்டு நரம்பை அறுத்துள்ளார். 


அதன் பிறகும் அவரின் உயிர் பிரியாததால் அருகில் உள்ள டெடிபியரை வைத்து தமிழ் செல்வியின் முகத்தை அழுத்தியுள்ளார். அதன்பிறகுதான் அவர் இறந்துள்ளார். இதையடுத்து பாபநாசம் படம் போல போலீஸார் விசாரித்த போது தைரியமாக சுத்தியல் வாங்கச் சென்ற கதையைத் தெரிவித்தார். 

இருப்பினும் சிசிடிவி கேமரா பதிவு, சூயிங்கம் ஆகியவற்றால் எங்களிடம் சிக்கிக் கொண்டான்" என்றார். கைதான மாணவன் போலீஸாரிடம், `அத்தை தமிழ்செல்வி செய்த டார்ச்சரால் தான் அவரைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றேன். மாமா, என்னிடம் அன்பாக இருப்பார். ஆனால், அத்தையின் ஒவ்வொரு நடவடிக்கை களும் எனக்குப் பிடிக்க வில்லை. 
என்னுடைய உறவினர் ஒருவரின் பிறந்த நாளான்று அத்தையின் மகளோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அங்குவந்த அவர், அனைவரின் முன் என்னை அடித்து விட்டார். இதனால் அவமானத்தில் கூனிக்குறுகினேன். அதற்குப் பழிவாங்கத் தான் அவரைக் கொலை செய்தேன்' என்று வாக்குமூலமாக குறிப்பிட் டுள்ளார்.

தமிழ்ச் செல்வியை அவரின் மருமகனான 14 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கொலை செய்து விட்டு கடந்த நான்கு நாள்களாக எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் சர்வ சாதாரணமாகவே அவர் இருந்தது போலீஸாருக்கே அதிர்ச்சியையும் வியப்பையையும் ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings