பொங்கல் பரிசை தர மறுத்த மனைவியை வெட்டி கொன்ற முதியவர் !

0
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (70). மனைவி ராசம்மாள் (65). இவர் கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்று மாதம் ஒருமுறை வீட்டிற்கு வருவார். 


நேற்று முன்தினம் ஊருக்கு வந்த ராசாத்தி, அரசு வழங்கும் பொங்கல் பொருள் மற்றும் ₹1000 -த்தை ரேஷன் கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். 
அப்போது, ‘‘ரேஷன் கடையில் தந்த பணத்தில் 500 ரூபாயை கொடு’’ என மனைவியிடம் ராமர் கேட்டுள்ளார். ராசம்மா கொடுக்க மறுத்தார். 

இதனால் நேற்று அதிகாலை 4 மணியளவில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராசம்மாவை தலையில் அரிவாளால் ராமர் சரமாரி யாக வெட்டிக் கொலை செய்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings