பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட மேயர் !

0
மெக்சிகோ வின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். 
அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற் காக, அங்குள்ள அரங்கத் திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.


அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மேயரை துப்பாக்கி யால் சுட்டு விட்டு தப்பி யோடினார். 

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேயர் உள்ளிட்ட 4 பேர் உடனடி யாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி மேயர் உயிரிழந்தார். மறுநாள் மற்றொரு நபர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவில், கடந்த 2017 ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 175 அரசியல் வாதிகள் கொல்லப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings