ஓகோ நீங்க தான் நிர்மலாஜியின் செய்தித் தொடர்பாளரோ?- குஷ்பு !

0
நீங்கள்தான் நிர்மலாஜி யின் செய்தித் தொடர்பாளரோ? என ரஃபேல் விவகாரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை கிண்டலடித் திருக்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு.


ரஃபேல் விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலை தளங்களிலும் பாஜகவும் காங்கிரஸும் கருத்து மோதல்களில், வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திட மிருந்து 36 ரஃபேல் போர் விமானங் களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக் கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப் பட்டுள்ள தாகவும், 

விமான உதிரி பாகங்களைத் தயாரிப்ப தற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்து க்கு அளிக்கப் பட்டதில் முறைகேடு நடைபெற்றுள் ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், ரஃபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு "How much does he know? When will he know?" எனப் பதி விட்டிருந்தார்.


ராகுல் காந்தி எதைப் பேசினாலும் "How much does he know? When will he know?" என்ற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதாவது பதிலிடுவது ஜேட்லியின் வழக்கம். 

ரஃபேல் விவகாரத்தில் ட்விட்டராட்டி ஒருவர் கேள்வி எழுப்பிய தற்கும் இதே பதிலை பதிவிட்டிருந்தார். ரஃபேல் விவகாரத்தில் பெரும்பாலும் நாடாளு மன்றத்தில் ஜேட்லியே பதிலளிப்பதால் அந்த நெட்டிசன் உங்கள் இலாகா என்னவென்று கேள்வி எழுப்பி யிருந்தார்.

இதனை சுட்டிக் காட்டிய குஷ்பு, "உங்கள் இலாகா வேலைகளை நீங்கள் எப்போது கவனிப்பீர்கள்? பாதுகாப்பு அமைச்சர் எப்போது பேசுவார். நீங்கள்தான் நிர்மலாஜி யின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளரா" எனக் கேள்வி எழுப்பி யிருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings