டென்மார்க்கில் ரெயில் மோதி விபத்து - 8 பலி !

0
டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக நேற்று முன்தினம் ஒரு பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.
கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்த போது அந்த பயணிகள் ரெயில் மீது பக்க வாட்டில் சென்ற ஒரு சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியது. 


இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாகவும், காய மடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டனர் எனவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தி லிருந்து மேலும் 2 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். 

இதையடுத்து, ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings