10 நாளில் இரு அதிரடி தீர்ப்பு - வில்லனான சிறப்பு நீதிமன்றம் !

0
பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ -க்கள் முன்னாள் எம்.பி- கள் மீதான கிரிமினல் குற்ற வழக்கு களை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் உருவாக்கப் பட்டபோது, சாதாரண மாகவே அனைவரும் பார்த்தனர். 


தொடங்கப்பட்டு 4 மாதங்களே ஆகின்றன. ஆனால், தொடக்கம் முதலே இந்த நீதி மன்றத்தின் தீர்ப்புகள் அதிரடிதான் என்பது ஸ்பெஷல்.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், இந்த நீதிமன்றத் தால் தண்டிக்கப் பட்ட முதல் குற்றவாளி. கடந்த டிசம்பர் 28-ம் தேதி வழங்கிய தீர்ப்பு இது.  கேரளத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராஜ்குமார் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். 

இரண்டாவது அதிரடியாகத் தமிழக விளை யாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இந்த நீதி மன்றத்தால் 3 ஆண்டுகள் தண்டனைக் குள்ளாகி எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். 

10 நாள்களு க்குள் இந்த நீதிமன்றம் வழங்கிய இரு அதிரடிக ளால் தமிழக அரசியல் வாதிகள் கதி கலங்கி யுள்ளனர்.

ஏனென்றால் , நாட்டிலேயே அதிகளவில் தவறிழைக்கும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகத் துக்கு மூன்றாமிடம். (992 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தி லும் 331 வழக்குகளுடன் ஒடிஷா இரண்டாவது இடத்திலும் உள்ளன) 

தமிழகத்தில் முன்னாள் இந்நாள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மீது 321 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 129 வழக்குகள் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மீதும் தற்போது பதவியில் உள்ள 15 எம்.பி-க்கள், 122 எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குகள் உள்ளன. 

47 முன்னாள் எம்.பி-க்கள் மீதும் வழக்குகள் உள்ளன. இதில் 105 வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் தடையாணை பிறப்பித் துள்ளன.

தி.மு.க-வைச் சேர்ந்த கே.என். நேருவுக்கு சிறப்பு நீதி மன்றத்தால் கொஞ்சம் சிக்கல் தான். இவர் மீது அதிகபட்சமாக 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

ஏதாவது ஒன்றில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப் பட்டால் கூட நேருவின் அரசியல் வாழ்க்கை பாதித்து விடும். கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் இந்தச் சிறப்பு நீதிமன்றம் சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு உருவாக்கப் பட்டது. 


வெறும் 4 மாதங்க ளிலேயே சிறப்பு நீதிமன்றம் தவறிழை க்கும் அரசியல் வாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக மாறியுள்ள தாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நீதிமன்றம் அமைக்கப்பட முட்டுக் கட்டை இருந்தது. சிறப்பு நீதி மன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டும் அமைக்காமல் தவிர்க்கப் பட்டு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,

மீண்டும் உச்ச நீதிமன்றம் எச்சரித்த பின்னரே கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கத் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மாடி உத்தரவு பிறப்பித்தார். 

மேலும்
இனிமேல், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி -க்கள் மீதான வழக்குகள் விரைவாக விசாரிக்கப் பட்டுத் தீர்ப்பளிக்கப்படும். அதிகாரம் காரணமாக அக்கிரமங் களில் ஈடுபடும் அரசியல் வாதிகளுக்கு சிறப்பு நீதி மன்றங்களின் சாட்டையடி தொடர வேண்டு மென்பதெ மக்களின் அவா!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings