தெலங்கானாவில் மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது !

0
தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பதி சத்தேனா - லட்சுமி. இவர்களது மகள் அனுராதா. 


அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞரை காதலித் துள்ளார்.

போலீஸ் திருப்பி அழைத்து வந்தபோது திடீரென மயங்கிய தால் பரபரப்பு இவர்களின் காதலுக்கு அனுராதா வின் பெற்றோரும், உறவினர் களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதை யடுத்து 3-ம் தேதி ஹைதராபாத் சென்ற அவரகள் அங்குள்ள ஆரியசமாஜ் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

தங்கள் திருமணத்தை யும் பதிவு செய்துள்ளனர். பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி யுள்ளனர்.

மகள் அனுராதா வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் சத்தேனா கடும் கோபத்தில் இருந்துள்ளார். 

மகள் சொந்த ஊர் திரும்பிய தகவல் தெரிந்ததும் உறவினர் களுடன் சென்று லட்சுமண் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி யுள்ளார். அவரது வீட்டை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் அனுராதாவை வெளியே இழுத்து வந்துள்ளது.

ஊர் மக்கள் கூடி வேடிக்கை பார்க்க எதை பற்றியும் கவலைப் படாமல் சத்தேனாவும் அவரது உறவினர் களும் அனுராதாவை அடித்து உதைத்து தெருவில் இழுத்து வந்துள்ளனர்.

பின்னர் அருகில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்று அவரை கொலை செய்து உடலை எரித்ததாக கூறப்படுகிறது. சாம்பலையும் நீர்நிலையில் கரைத்து விட்டதாக கூறப் படுகிறது.


இதை யடுத்து தனது மனைவி அனுராதாவை அவரது தந்தை கொலை செய்து விட்டதாக லட்சுமணன் போலீஸில் புகார் அளித்தார். சத்தேசனா வும், அவரது உறவினர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா வில் சமீபத்தில் இதே போன்ற ஜாதி ஆணவப் படுகொலை சம்பவம் நடந்தது.

தனது மகள் அம்ருதாவை தலித் சமூக இளைஞர் பிரணய் குமார் திருமணம் செய்து கொண்டதால் அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த மாருதி ராவ் கைது செய்யப் பட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings