ரத்த தானம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி !

0
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிக்கு ரத்த தானம் செய்ததில் எச்ஐவி நோய் தொற்று இருந்த அதிர்ச்சி சம்பவம் வெளி வந்துள்ள நிலையில் அந்த ரத்தத்தை தானமாக கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ுதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 2-ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். 


இந்நிலையில் ரத்தசோகை இருந்ததால் இவருக்கு சிவகாசியி லிருந்து தானமாக பெறப்பட்ட ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடல்நிலை மோச மடைந்ததை அடுத்து அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

சிவகாசி அரசு மருத்துவ மனையில் ரத்தத்தை தானமாக கொடுத்த அந்த இளைஞர் வெளிநாடு செல்வத ற்காக மதுரையில் ரத்தத்தை பரிசோதனை செய்துள்ளார்.

அதில் அவருக்கு எச்ஐவி நோய் இருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து சிவகாசி மருத்துவ மனைக்கு சென்று அந்த ரத்தத்தை யாருக்கும் தானம் செய்து விட வேண்டாம் என இளைஞர் கூறி யுள்ளார்.

தற்குள் அந்த ரத்தம் சாத்தூர் மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. இதனால் கர்ப்பிணி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார். 


இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்தவர் ராமநாத புரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலை க்கு முயன்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணை யில் அந்த 19 வயது இளைஞர் கமுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற் சாலையில் வேலை செய்ததும் தெரிய வந்தது. 

இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப் பட்டு விட்டாரே என்று அறிந்த அந்த இளைஞர் தற்கொலை க்கு முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings