விருப்ப ஓய்வு பெற்ற பெண் போலீசுக்கு முக ஸ்டாலின் ஆறுதல் !

0
திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் தலைமைக் காவலராக பணி யாற்றியவர் செல்வராணி. 


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த போது இரங்கல் தெரிவித்து கவிதை வெளி யிட்டிருந்தார்.

அவரது கவிதை சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து 

செல்வராணி திருச்சி மாநகர காவல் துறையில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.

பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வில் செல்வதாக காவல் துறைக்கு கடிதம் அளித்தார். 

அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். 

இந்நிலையில் விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளப் பட்டதற்கான கடிதம் திருச்சி மாநகர 

போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து செல்வராணி க்கு அளிக்கப் பட்டது. 

இதை யடுத்துஅவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து செல்வராணி கூறும் போது, 


கருணாநிதிக்கு இரங்கல் கவிதை பாடியதற்கு விளக்கம் கேட்டு எனக்கு மெமோ அளித்தனர். 

அதற்கு பதில் அளிப்பதற்குள் திடீரென என்னை பணியிட மாற்றம் செய்தனர். 

விளக்கம் தருவதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரி களிடம் முறை யிட்டும் யாரும் சரியான பதில் சொல்ல வில்லை.

என் பேச்சுரிமை பறிக்கப் பட்டதாக உணர்ந்தேன். பணியில் சேர்ந்தால் மீண்டும், மீண்டும் 

இடமாற்றம் செய்யப்பட்டு பழி வாங்கப் படலாம் என்பதால் குடும்பத்தின் நலன் கருதி பணியி லிருந்து விலகி விட்டேன். 

இதற்கு முன்னர் ஜெயலலிதா மறைந்த போது நான் கவிதை வாசித்தற்கு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


இந்த நிலையில் நேற்று திருச்சி ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 

செல்வராணி க்கு விருப்ப ஓய்வு கொடுத்த தகவல் அறிந்து கே.கே.நகர் ரெங்கநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது செல்வராணி க்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், 

இரங்கல் தெரிவித்த தற்காக மெமோ கொடுத் துள்ளனரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? 

இனி என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்க, இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. 

இனி தலைவர் கருணாநிதி விட்டுச் சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபல மாக்குவேன் என்றார்.

நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். 


நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செல்வராணி யின் கணவர் 

ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings