காதலன் போனை எடுக்காததால் உயிரை மாய்த்த நர்சிங் மாணவி !

0
வேலூரில் காதலன் பேச மறுத்து போனை எடுக்காத தால் விரக்தி யடைந்த நர்சிங் மாணவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


வேலூர் பாகாயம் சஞ்சீவ புரத்தைச் சேர்ந்தவர் குணசீலன். இவரின் மகள் அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். 

இதற்கிடையே, ஒருவரைக் காதலித்து வந்துள்ளார் அப்பெண். இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவர, பெற்றோர் கண்டித் துள்ளனர். 

மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாக தெரிவித் துள்ளனர். 
முழு ஆட்டை சுட்டுத் தின்ற விசித்திர மனிதன் !
இது பற்றி தன்னுடைய காதலனிடம் போனில் தெரிவித்த அவர், ‘தன்னைத் திருமணம் செய்து கொள்’ என்று கூறி யுள்ளார்.

திருமணத் திற்கு மறுத்த காதலன், அதன்பிறகு போனை எடுக்க வில்லை. பல முறை போன் செய்தும், காதலன் போனை எடுக்க வில்லை. 

இதை யறிந்த பெற்றோர் மீண்டும் கண்டித் துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அப்பெண், 


நேற்று நள்ளிரவில் வீட்டில் உள்ள கழிவறை யில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண் டுள்ளார். 

தீ விபத்தின் போது மகளின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் அலறி எழுந்தனர்.

கழிவறை பகுதிக்கு ஓடி வந்து பார்த்த போது, மகள் தீயில் எரிந்து கொண்டி ருந்ததை பார்த்துக் கதறி துடித்தனர். 

சிறிது நேரத்தில் அந்தப் பெண் தீயில் முழுவது மாக வெந்து உயிரிழந்தார். 
கஜா புயலின் தாக்கம் பற்றிய படம் !
தீயை அணைக்க முற்பட்ட பெற்றோரும் தீக்காய மடைந்தனர். 

மாணவி யின் உடல் பிரேத பரிசோதனைக் காக அடுக்கம் பாறை அரசு மருத்துவ மனையில் வைக்கப் பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து, காதலன் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings