ஹரியாணாவில் மூடுபனியால் வாகனங்கள் மோதி பயங்கர விபத்து !

0
ஹரியாணா வில் கடும் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலை யில் அடுத்தடுத்து சென்ற 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. 
இதில் 8 பேர் பலியாகி யுள்ளனர். வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வழக்கமான சராசரி வெப்ப நிலையை விடவும், மிகவும் குறைவான வெப்பநிலை காணப்படு கிறது. 

அத்துடன் அதிகாலை நேரங்களில் அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. 


வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே மிகுந்த எச்சரிக்கை யுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹரியாணா மாநிலம், ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலை யில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அடுத்தடுத்து சென்று கொண்டு இருந்தன. 

அப்போது மூடுபனி காரணமாக அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. 

வரிசையாக சென்ற 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி நிலை குலைந்தன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாய மடைந்தனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings