தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணுக்கு பிரசவம் !

0
குடும்ப பிரச்சனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் அருகே கட்னி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி லட்சுமி தாகூர். 

சந்தோஷ் விவசாய தொழில் செய்துவரும் நிலையில், அவரது மனைவி லட்சும் தாகூர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

தணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், நேற்று இருவருக்கு மிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் சந்தோஷ் தூங்க சென்றதும், வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி லட்சுமி, மாட்டுத் தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 


விடிந்ததும் மனைவியை தேடிய சந்தோஷ், மாட்டுத் தொழுவதில் பார்த்த போது மனைவி தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனை யடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்க முயற்சித்த நிலையில், லட்சமிக்கு பிரசவம் ஏற்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் இறந்த லட்சுமிக்கு குழந்தை பிறந்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் கவிதா உடனடியாக மருத்துவ மனைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், லட்சுமி தூக்கில் தொங்கியப் படியே இருந்த போது குழந்தையின் தொப்புல் கொடியை அறுத்து மீட்டனர். 

தாய் இறந்தும் உயிர் பிழைத்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுது்து லட்சுமியின் சடலத்தை கீழே இறக்கிய போலீசார், பிரேத பரிசோதனை க்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்த கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதி யில் பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings