சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ் !

0
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில் 


பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. 

இதில், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில் 

துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கினர்.

குறிப்பாக 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி யமைக்க 46 உறுப்பி னர்கள் தேவை என்ற 

நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 

இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி யமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மத்திய பிரதேசத்தைப் பொருத்த வரை ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை யில் இருந்தது. 

நேரம் செல்லச் செல்ல காங்கிரசுக்கு இணையாக பாஜகவும் முன்னேறியது. 

ஆட்சி யமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 


பாஜக 102 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த நிலவரத்தில் அடுத்தடுத்து மாற்றம் ஏற்படுவ தால், இழுபறி நீடிக்கிறது.

இதேபோல் ராஜஸ்தானி லும் இழுபறியே நீடிக்கிறது. ஆட்சி யமைக்க தேவையான மேஜிக் நம்பரை (100) எந்த கட்சியும் நெருங்க வில்லை. 

காங்கிரஸ் 94 இடங் களிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings