தன் கள்ள காதலனுக்கு மகளை விருந்தாக்கிய கொடூர தாய் !

0
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குருசு குப்பத்தை சார்ந்தவர் தேவா (23)., இவர் அங்குள்ள கவுண்டன் பாளையத்தில் இருக்கும்
ஆருத்ரா நகரில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

அதே போல்., அங்குள்ள ரெட்டியார் பாளையத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்களின் உல்லாச வாழ்க்கை அதிகரிக்கவே., தேவாவை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று தனது உல்லாச வாழ்க்கையை மேற்கொண்டு வந்துள்ளார்.


தனது தாயுடன் வசித்து வந்த மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லையை வழங்கி வந்துள்ளார்.

இந்த தொல்லைக்கு அந்த சிறுமியின் தாயாரும் தேவாவிற்கு உடந்தையாக இருந்து வந்துள்ளார்.

ஒரு சமயத்திற்கு மேலாக தனது தாயாரின் கொடுமையை பொறுக்க இயலாத மாணவி சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலை அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக சம்பவம் குறித்து அதிரடி விசாரணை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொள்ள கூறி ரெட்டியார் பாளையம் காவல் துறையினரு க்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மாணவிக்கு தேவா பாலியல் தொல்லை வழங்கி வந்ததை உறுதிபடுத்தி., அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும்., பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை வழங்க தாயாரும் உடன் இருந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings