இஸ்லாம்பாத்தில் செல்போன் டவரில் ஏறி போராடிய நபர் - ருசிகரம் !

0
இஸ்லாம்பாத்தில் செல்போன் டவரில் ஏறிய நபர் தன்னைப் பிரதமராக் குங்கள் என்றும் பிரதமரானால் பொருளா தாரத்தை மேம்படுத்துவேன், 
6 மாதங்களில் அனைத்துக் கடன் களையும் அடைத்து விடுவேன் என்றும் கூப்பாடு போட்டது பரபரப்பானது.

இவர் யார், என்ன என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சர்கோதா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் கொடியை ஏந்தியபடி இவர் செல்போன் டவரின் மீது ஏறி இவ்வாறு கூச்சலிட்ட தாக ஜியோ நியூஸ் தெரிவித் துள்ளது.


கீழே இறங்குமாறு இவரிடம் மன்றாடிய போது, தான் பிரதமர் இம்ரான் கானிடம் தான் பேசுவேன் அல்லது சர்கோதா போலீஸ் உயரதிகாரி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உள்ளூர் போலீஸார் சாதுரியமாக ஒரு காரியம் செய்தனர். மிமிக்ரிக்கு பெயர் பெற்ற காமெடி கலைஞர் ஷஃபாத் அலி என்பவரை 

தொடர்பு கொண்டு பிரதமர் இம்ரான் கான் போல் பேசுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் பேசியுள்ளார், 

அவர் பேசப்பேச திருப்தி யடைந்த அந்த நபர் செல்போன் டவரிலிருந்து இறங்கினார். கீழே இறங்கிய வுடன் அவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings