பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை !

0
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூன்று வகை நெருக்கடி களுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. புதிய மூலதன நெருக்கடி, நிதிச் சுழற்சி நெருக்கடி, காலத்துக்கேற்ற தொழி ல்நுட்பக் கொள்முதல் நெருக்கடி. 
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை !
இந்த மூன்றி லிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ள கடந்த 8 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் போராடிக் கொண்டிருக்கிறது.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்க உதவி கூடாது என தனியார் தொலைத் தொடர்பு பெருநிறுவனங்கள் 2012-ல் எதிர்த்தன. 

அரசாங்கம் தனது அலை வரிசையை ஏலத்தின் வழியாக மட்டுமே வழங்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டல் வந்த பின்னர், 

பொதுத்துறை நிறுவனம் தனக்கான அலை வரிசையைப் பெறுவதற்கு ரூ.18,500 கோடியை ஒரே தவணையில் வழங்கி, தன் இருப்பைக் கரைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டது. 
அதே நேரத்தில், சில தனியார் பெரு நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசை உரிமம் பெறாத பகுதியிலும் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு சேவை தந்து லாபம் சம்பாதித்துக் கொண்டன.

இது தொழில் அல்ல... பொறுப்பு!

தொலைபேசி மட்டுமே இருந்த காலத்தில் ‘நிர்வாக முறை விலை நிர்ணயக் கொள்கை’யை நாடாளு மன்றமே முடிவு செய்தது. 

சாமானிய மக்கள் பயன்படுத்திய உள்ளூர் அழைப்புகளுக்கு விலை மிகக் குறைவாக இருந்தது. 
நடுத்தட்டு மக்கள் பயன்படுத்திய உள்நாட்டு அழைப்பு களுக்குச் சற்று கூடுதலா கவும்  உள்ளூர் அழைப்பு களுக்குக் குறுக்கு மானியம் தரக்கூடிய அளவிலும் விலை நிர்ணயிக்கப் பட்டது. 

உயர் தட்டினருக்கு வெளிநாட்டு அழைப்புக் கட்டணம் கூடுதல் விலையில் இருந்தது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் விலை நிர்ணய முறையைப் புரட்டிப் போட்டன. 

அனைத்து வாடிக்கை யாளர்களும் அவர்கள் எந்தத் தட்டில் இருந்தாலும் பயனாளிகள் என்ற ஒற்றை அளவுகோல் முன் வைக்கப்பட்டு, 

உள்ளூர் அழைப்பு களுக்கு விலை ஏறி வெளிநாட்டு, உள்நாட்டு அழைப்பு களுக்குக் கட்டண வீழ்ச்சி ஏற்பட்டது. 

இதில் உலக வர்த்தக நிறுவனத்தின் தலையீடும் இருந்தது. தனியார் நிறுவனங் களுக்கு உரிமம் தரப்பட்டு கழுத்தறுப்பு போட்டிச் சூழல் உருவாக்கப் பட்டது. 
தொலைத் தொடர்பில் பொதுத்துறை தனது நூற்றாண்டு பாரம்பரிய மரபுரிமையை இழந்தது. சமப் போட்டியாளர் என்ற அந்தஸ்தில் நிறுத்தப் பட்டது. 

ஆனால், இந்த சமதளப் போட்டி என்ற பேச்செல்லாம் சந்தையில் தான். பொறுப்பில் அல்ல. வேலை வாய்ப்பு என்பது சமதளப் போட்டிக்கான காரணிகளில் ஒன்றாக மாற்றப் படவில்லை. 
ஓர் உதாரணம், லட்சக்கணக் கானவர்களுக்கு நிரந்தர வேலையைத் தரும் பொதுத்துறை, அப்படி எந்தக் கடமையும் பொறுப்பும் இல்லாத தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடப்பட்டது. 

அவ்வப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களைக் கடனில் பெற்றுக்கொண்டு, சில ஆயிரக்கணக்கான 

பணியாளர்களைக் கொண்டு சேவை தரும் வாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் தொலை தொடர்புத் துறையில் பெற்றன. 
தங்களின் குறைவான மூலதனத்துடன் வங்கிகளின் மூலதனத்தையே பெருமளவு சார்ந்து இயங்கின. 

அதன் விளைவு தான், வங்கிகள் இனிமேல் தொலைத் தொடர்புத் துறைக்குக் கடன் தருவது வங்கித் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிற படிப்பினையைத் தந்திருக்கிறது. 

பெரு நிறுவனங்களும் கூட தொலைத் தொடர்புத் துறையில் நீடிக்க முடியாமல், வீழத் தொடங்கும் கட்டமும் வந்துள்ளது.

பொதுத்துறைக்கு எதிரான யுத்தம்

புதிய நிறுவனம் ஒன்று, அரசின் முழு ஆதரவுடன் நுழைந்து, ஏற்கெனவே உள்ள நிறுவனங் களையும் கூட வீழ்த்தும் கட்டண யுத்தம் தொலைத் தொடர்பில் இன்று பெருமளவு நடக்கத் தொடங்கி விட்டது. 

இந்தத் தனியார் யுத்தங்களுக்கு மத்தியில் தான் வங்கியி லிருந்து கடன் பெறாமல் 2 லட்சம் ஊழியர் களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு புதிய தொழில் நுட்பச் சவாலையும் சந்தித்துக் கொண்டு 

உலகிலேயே மலிவான விலைக்கு பொதுத்துறை சேவை செய்து கொண்டிருக் கிறது பிஎஸ்என்எல். ஆனால், இனிமேலும் அப்படி நீடிக்க முடியாது.

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைத் தொடர்புத் துறை தனது முகத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 
இனி, குரல் அழைப்பு களை நம்பி வர்த்தகம் இருக்கப் போவதில்லை. ‘டேட்டா’ மிகப் பெரும் வர்த்தகப் பகுதியாக வளர்ந்து வருகிறது. உலகம் விரைவில் 5ஜி தொழில்நுட்பச் சேவையின் பலன்களை காணப் போகிறது. 

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையைத் தரத் தொடங்கி 24 கோடி வாடிக்கை யாளர்களைப் பெற்று விட்டன. 

விரிவாக்கம் வேண்டும் என்பதும், புதிய தொழில் நுட்பம் வேண்டும் என்பதும் கூட பிஎஸ்என்எல் தொழிலாளர் போராட்டக் கோரிக்கை களில் ஒன்றாக இருக்கிறது.

‘டேட்டா’ வாணிபத்து க்குத் தேவைப்படும் அலைவரிசை பெறுவதில் பிஎஸ்என்எல் வழக்கம் போல் காக்க வைக்கப் படுகிறது. 

ஓட்டப் பந்தயம் துவங்கி தனியார் நிறுவனங்கள் பல மைல்கள் ஓடி விட்டன. 4 ஜி சேவைக்குரிய அலை வரிசையையே இனி தான் பிஎஸ்என்எல் பெற வேண்டும். 

இது நியாயமே அல்ல. பிஎஸ்என்எல் தனக்கும் 4ஜி-க்குரிய அலைவரிசை 2100 மெகா ஹெர்ட்ஸைத் தர வேண்டும் என 

அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையைக் கடந்த 2017 டிசம்பரில் அளித்தது. இன்னும் அந்த அறிக்கைக்கு அரசாங்கம் உரிய கவனத்தைக் கொடுக்க வில்லை.

தனியாருக்கு மட்டுமே அரசு ஆதரவு

பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது மூலதனத் துடன் புதிய மூலதனம் சேர்க்காமல் தொழில் நடத்த முடியாத நிலையில் இருக்கின்றன. 
பிஎஸ்என்எல் அப்படிப் புதிய மூலதன த்தையும் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு முறை கூட அரசிடமிருந்து கேட்க வில்லை. 

அப்படி யிருந்தும், 4ஜி அலை வரிசையில் மாநிலம் ஒன்றுக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் என்ற அளவில் மொத்தமாக 105 மெகா ஹெர்ட்ஸ் தர வேண்டும் 

என்கிற பொதுத் துறையின் கோரிக்கை நிறை வேற்றப் படாமலேயே கிடப்பில் போடப் பட்டிருக்கிறது. 
அதற்குரிய தொகையை தவணை முறையில் செலுத்தத் தயார் என்று பிஎஸ்என்எல் என்று சொல்லிய பின்னும் அரசு அந்தக் கோரிக்கையைக் கண்டு கொள்ளவே இல்லை. ஏன்?

அடக்க விலையைக் கூட ஈடுகட்ட முடியாத, கொள்முதலே செய்ய முடியாத, விரிவாக்க மில்லாத வர்த்தகச் சூழல் பொதுத்துறை தொலைத் தொடர்பின் மீது வலிந்து திணிக்கப் பட்டுள்ளது. 

பாரம்பரிய மாக பிஎஸ்என்எல் பெற்றிருந்த லேண்ட்லைன் எனும் தரைவழி அழைப்புக் கொள்கையும் தனியாருக்குச் சாதகமாக மாற்றப் பட்டுள்ளது.

ஊரக மற்றும் நஷ்டம் வரும் சேவைகளுக்கு மானியம் தருவதாக ஏற்றுக் கொண்ட அரசு, மூன்றே ஆண்டுகளில் அதை நிறுத்திக் கொண்டு விட்டது.
கடன் வலையி லிருந்து தப்பிக்க 100% அந்நிய நேரடி முதலீடுகளைத் தனியார் நிறுவனங்கள் நிர்ப்பந்தப் படுத்திப் பெற்றுக் கொண்டன. 
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை !
அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மூலதனப் பற்றாக்குறை சரிகட்டப் படுகிறது. 

ஆனால், பிஎஸ்என்எல் மூலதனப் பற்றாக் குறையுடன், குறைந்த கட்டண வருவாயுடன், லட்சக்கணக் கான ஊழியர் களுக்கான ஊதியச் செலவுடன் போட்டிக் களத்தில் நின்று சமாளித்து வருகிறது. 
இயற்கைப் பேரிடர் காலங்களில் மட்டுமே பொதுத்துறை தொலைத் தொடர்பின் அவசியம் மக்களின் கண்களு க்குத் தெரிகிறது. 

தொலைத் தொடர்புத் துறையில் எப்போதுமே பொதுத் துறைக்கு ஒரு முக்கிய மான பங்கு இருந்தால், நாட்டின் பாதுகாப்பு க்கும், 

சமூகப் பொருளாதார த்துக்கும் அவை எவ்வளவு பங்களிக்க முடியும் என்பது ஆட்சியாளர் களுக்குத் தெரியா திருக்குமா என்ன?

- ஆர்.பட்டாபிராமன், பிஎஸ்என்எல் தொழிற்சங்கத் தலைவர்,
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)