சிக்கிய ஆவணங்கள் - வதேராவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத் துறை !

0
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 


அலுவலக த்தில் நள்ளிரவில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி அதிரடி காட்டி யுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா. 

இவருக்கு அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் முறைகேடாக நிலங்கள் வழங்கப் பட்டது தொடர் பாகக் குற்றச் சாட்டுகள் உள்ளன. 

நில பரிமாற்றத்தின் போது சட்டவிரோத பண பரிவர்த்தனை யில் ஈடுபட்ட தாகக் கூறி அமலாக்கத் துறை வதேரா மீது வழக்குப் பதிந்துள்ளது.

இந்தக் குற்றச் சாட்டு குறித்த விசாரணை பல வருடங்க ளாக நடைபெற்று வருகிறது. 


ஆனால், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வதேரா விசாரணை க்கு ஆஜராக வில்லை எனக் கூறப் படுகிறது. 

இந்நிலை யில், நேற்று நள்ளிரவு டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேரா 

அலுவலக த்தில் புகுந்து அமலாக்கத் துறையினர் அதிரடி யாகச் சோதனை நடத்தினர்.

இதே போல் வதேராவின் நெருங்கிய நண்பர்கள் மூவரின் வீடுகளி லும் அதிகாரிகள் அதிரடி யாகச் சோதனை மேற்கொண்டனர். 

பல மணி நேரம் நீட்டித்த இந்தச் சோதனையில் கட்டுக் கட்டாக ஆவணங் களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். 


இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி யுள்ளது. 

ஆனால், அரசியல் காழ்ப்பு உணர்ச்சி யுடன் ரெய்டு நடந்திருப்ப தாக வதேரா குற்றம் சாட்டி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings