புதுச்சேரியில் பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு !

0
புதுச்சேரியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
புதுச்சேரி - சாணரப்பேட்டையைச் சேர்ந்த கேசவன், தனது அண்ணன் மகனான ப்ளஸ் 1 படித்த மணிகண்ட னுடன் நேற்றிரவு சுண்ணாம் பாற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். 

அங்காளம்மன் கோவில் எதிரே, ஆற்று நீரின் அடியில் சேற்றில் தென்படும் வௌவால் மீன்களைப் பிடிக்க அவர்கள் முயன்றுள்ளனர். 


மீன் பிடிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி யுள்ளனர்.

அப்போது அவர்களின் கூச்சலைக் கேட்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை யும், போலீசாரையும் வரவழைத்தனர். 

இதனிடையே, கேசவனும், மணிகண்டனும் உயிரிழந்தனர். பின்னர் நடந்த மீட்புப் பணியில் கேசவன், மணிகண்டன் ஆகியோரின் சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. 

சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings