பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல் !

0
வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன் பாட்டை நடை முறைக்கு கொண்டு வருவது 


தொடர்பாக ‘சி.ஓ.பி. 24’ என்னும் பேச்சு வார்த்தை போலந்து நாட்டில் உள்ள கேட்டோவைஸ் நகரில் நடந்தது.

மிக நீண்ட பேச்சு வார்த்தையில், 2015-ம் ஆண்டு நிறை வேற்றப் பட்ட பாரீஸ் பருவ நிலை மாற்ற 

உடன் படிக்கையை 2020-ம் ஆண்டு க்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப் பட்டது.

இதன்படி பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக் கப்படும். 
இதுபற்றி இந்த பேச்சு வார்த்தை க்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா கூறும் போது, 

“பாரீஸ் பருவநிலை மாற்ற உடன் பாட்டை ஒன்றி ணைத்து நடை முறைக்கு கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். 

இது நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. யாரையும் விட்டு விடாமல் இந்த உடன் பாட்டை 

நடைமுறைப் படுத்த செய்வதற் காக கடுமை யாக உழைத்தோம்” என்று குறிப்பிட்டார். 


இந்த பேச்சு வார்த்தை யில் புதிய விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

2020-ம் ஆண்டுக்கு முன்ன தாகவே கார்பன் வெளியேறுகிற அளவை கட்டுப் படுத்த வேண்டும் என்று 
இலக்கினை உலக நாடுகள் விரைவாக எட்ட வேண்டும் என்று பேச்சு வார்த்தை யில் விருப்பம் வெளியிடப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)