16 லட்சத்தை தின்ற ஆடு.... கோபத்தில் வெட்டி பிரியாணி செய்த குடும்பம் !

0
இந்த ஆடுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? கண்ணில எதை பார்த்தாலும் மேய ஆரம்பிச்சா... கடைசியில பிரியாணி ஆக வேண்டியது தான்!
16 லட்சத்தை  தின்ற ஆடு.... கோபத்தில் வெட்டி பிரியாணி செய்த குடும்பம் !
மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலம் வாங்க முடிவு செய்து, அதற்காக பணத்தை சேர்க்க ஆரம்பித்தார்.

ரொம்பவும் வறுமையான குடும்பம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க தொடங்கினார். கடைசியில் 16 லட்சம் ரூபாய் சேர்த்து விட்டார்.

வயலுக்கு சென்றார்கள்

இதை வைத்து 10 ஹெக்டர் நிலம் வாங்கவும் பிளான் குடும்பத்துடன் சேர்ந்து பிளான் பண்ணினர். 

எனவே பணத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்து விட்டு, குடும்பத்தில் எல்லோரும் வயலுக்கு சென்று விட்டார்கள். போகும் போது கதவை மூடாமல் திறந்து விட்டு போய் விட்டிருக்கி றார்கள்.
பணம் இல்லை

கதவு திறந்து கிடக்கவும், அவர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு ஆடு, உள்ளுக்குள் நுழைந்து டேபிள் மேல் இருந்த பணத்தை தின்று விட்டது. 

வயலிலிருந்து குடும்பத்தினர் வீடு திரும்பி வந்து பார்த்தால், பணத்தை காணோம்.

ஜீரணிக்க முடிய வில்லை
16 லட்சத்தை  தின்ற ஆடு.... கோபத்தில் வெட்டி பிரியாணி செய்த குடும்பம் !
பிறகு டேபிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டின் வாயில், கொஞ்சம் பிட்டு பிட்டாக பணத்துகள்கள் ஒட்டிக் கொண்டி ருந்ததை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி நின்றார்கள். 

16 லட்சம் ரூபாயையும் ஆடு மென்று தின்றதை அவர்களால் ஜீரணிக்கவே முடிய வில்லை.

சமைத்து சாப்பிட்டனர்

அதனால் ஆத்திரத்தில் அந்த ஆட்டை கொன்று குடும்பமே கோபத்துடன் சமைத்து சாப்பிட்டது. 

ஆட்டுக்கு மரண தண்டனை கொடுத்தா லும் அவர்களால் உழைத்து சம்பாதித்த அந்த 16 லட்ச ரூபாயை மறக்கவே முடியாமல் இன்னமும் சோகத்தில் உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings