பிரசாதம் சாப்பிட்டதில் பலி எண்ணிக்கை 15 - பூசாரியை பிடிக்க தனிப்படை !

0
கர்நாடக வின் சாம்ராஜ் நகர் மாவட்டத் துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. 


இங்கு கடந்த 2 நாட்களு க்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சி யில் பக்தர்களு க்கு 

தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப் பட்டன.

அந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலி யானார்கள். 

வாந்தி, மயக்கம் போன்ற உபாதை களால் அவதிப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள 

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டனர்.

அதில் நேற்று முன்தினம் நளினி என்ற பெண் பலியானார். 

இதைத் தொடர்ந்து நேற்று காலை யில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தனர். 

இவர்களை யும் சேர்த்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.


இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இச்சம்பவ த்தில் தொடர்புடைய கிருஷ்ண கிரியை சேர்ந்த காலப்பா என்ற 

பூசாரியை பிடிப்பதற் காக போலீசார் கிருஷ்ணகிரி விரைந் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings