நிவாரணப் பொருட்களை ஏற்றி செல்ல ரயிலில் சரக்கு கட்டண‌ம் கிடையாது !

0
கஜா புயல் பாதித்த மாவட்டங் களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டண‌ம் கிடையாது என ரயில்வே வாரியம் அறிவித் துள்ளது.


கஜா புயலானது தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங் களை புரட்டி போட்டுள்ளது. 

அரசு ஒரு புறம் தீவிரமாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார் வலர்கள் நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கி வருகின்றனர் 

சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன் மூலம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் வெளியூர் களில் இருந்து டெல்டா மாவட்டங் களுக்கு கொண்டு செல்லப் படுகின்றன. 

இந்நிலை யில் கஜா புயல் பாதித்த மாவட்டங் களுக்கு ரயிலில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல கட்டணத்தி லிருந்து 

விலக்களிக்க வேண்டுமென ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி யிருந்தார்.

அதற்கு பதிலளித்து ரயில்வே வாரியம் அறிக்கை வெளியிட் டுள்ளது. 


அதில் தமிழகத்திற் குள்ளும், பிற மாநிலங்களி லிருந்‌தும் கொண்டு வரப்படும் நிவாரணப் 

பொருட்களு க்கு கட்டண விலக்கு அளிக்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த சேவையானது வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings