குடிபோதையில் கார் ஓட்டிய இளம் பெண்ணால் கோர விபத்து ஒருவர் பலி !

0
டெல்லியில் ஆண் நண்பர்களுடன் குடிப்போதையில் இளம் பெண் ஓட்டி வந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. 


இதில் எதிரே வந்த காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஷிவானி மாலிக் (வயது 22) என்ற பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருடன் கிளப்புக்கு சென்று விட்டு 

வெள்ளியன்று இரவு 11 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தார். 

மது அருந்தி இருந்த ஷிவானி மாருதி காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படு கிறது.

பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த மகேந்திரா கார் மீது பயங்கரமாக மோதியது. 

அந்த காரில் பேர் கொண்ட குடும்பம் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தது. 

இந்த விபத்தில் மகேந்திர காரில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இவர்களில் பூனம் (வயது 38) என்ற பெண்ணும் அவரது 13 வயது மகளும் மிக பலத்த காயமடைந்தனர். 


மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். இதில் பூனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து நடந்த உடன் ஷிவானியுடன் வந்த ஆண் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஷிவானியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)