இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் சிக்கிய பெண் பலி !

0
சென்னை தி.நகர் பேருந்து நிலையத் தில் இரண்டு பேருந்து களுக்கு நடுவில் சிக்கிய பெண் பலியானது பயணிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.


இன்று காலை 9.15 மணிக்கு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் 

வெளியே செல்ல முயன்ற போது, ஒரு பெண் பேருந்தில் ஏற பின்னால் ஓடினார். 

அந்த நேரத்தில் இரண்டு பேருந்து களும் ஒன்றோடு ஒன்று உரசியதில், நடுவில் சிக்கிய பெண் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். 

அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

முதற்கட்ட விசாரணை யில் விபத்தில் பலியானவர் சைதாப் பேட்டையைச் சேர்ந்த வள்ளி (48) என்பதும், 


வேலைக்குச் செல்ல தி.நகர் பேருந்து நிலையத் தில் ஒரு பேருந்தில் இருந்து இறங்கி 

மற்றொரு பேருந்தில் ஏற முயன்ற போது விபத்தில் சிக்கி பலியானதும் தெரிய வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings