ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?

0
தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மை யான செல்களால் ஆனது. 


இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன.

இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகி யுள்ளது.

உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள்.

 தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்திவாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய் வாய்ப்படும் போது இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப் படுகிறார்கள்).

தொப்புள் கொடி ஸ்டெம் செல்லிருந்து தலஸ்சீமியா நோய்க்கு தீர்வு ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா.

இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.

ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது.

இதனால், பொருளாதார நிலையில் பின் தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது.

ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

தொப்புள் கொடி ஸ்டெம் செல் ரத்த வங்கி.. 

தொப்புள்கொடி ரத்த வங்கி மூலம் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்கள் பாதுகாக்கும் மூலம்,

உங்கள் குழந்தை துரதிருஷ்ட வசமான நிகழ்வுகள் போது உங்கள் குழந்தை உதவ முடியும் என்று

செய்தபின் பொருந்தும் செல்கள் உத்தர வாதமான மூல வேண்டும் உறுதி வேண்டும்.

ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டு களுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது.


தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2015 ஜூன் மாதத்திற்குள் 15,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம்.

சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் புற்று நோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளி களுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும்.

 மீதி 25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய்

ஆண்டு வருவாய் உள்ளவர் களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும்.

இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன் படுத்தப்படும்" என்கிறார் இ

து குறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பேசிய ஜீவன் ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் பி.சீனிவாசன்.

ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இது தான் முதல் முறை.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன.

ஆனால், இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல். ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால்,


இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்தால் போதும்.

மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார்,
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings