கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவன் - கேவலமான காரணம் !

0
கள்ளக் காதலால் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக அடித்து தாக்கி ,அவரை கணவர் குடும்பத்தினர் 
உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கிருஷ்ணகிரி கல்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாஷா. 37 வயது நிறைந்த இவருக்கும் , 

ரஷீயா என்ற 26 வயது பெண்ணிற்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பாஷாவுக்கு பெங்களூரில் வசித்து வந்த அசினா என்ற இளம் வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. 

இதற்கு பாஷாவின் பெற்றோர்கள் ஆதரவாக உள்ளனர்.

பாஷா, அசினா இருவரும் அடிக்கடி பார்ப்பது, பேசுவது, ஊர் சுற்றுவது என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாஷாவும், அசினாவும் படுக்கையில் உல்லாசமாக இருப்பதை ரஷியா கண்டுள்ளார் .

மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கணவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஷா, அவருடைய தந்தை பஷீர்சாய்பு, தாய் அபினாபீ 

மற்றும் அசினா ஆகியோருடன் சேர்ந்து 7 மாத கர்ப்பிணி யான ரஷீயாவை அடித்து கடுமையாக தாக்கி யுள்ளனர், 

பின்னர் மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்து ரஷியாவை உயிருடன் துடிக்க துடிக்க எரிந்து கொன்றுள்ளனர் .

இந்நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மகளை கணவர் குடும்பத்தாரே 

கொன்று விட்டதாகவும் ரஷீயாவின் தந்தை அன்வர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டது. 

அதில் அவர்கள் எரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கில் ரஷீயாவை எரித்து கொலை செய்த குற்றத்திற் காக 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 

தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings