திருவான்மியூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது !

0
சென்னை திருவான்மியூர், ரங்கநாத புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பெருங்குடி ஜீவரத்தின புரத்தை சேர்ந்த தியாகராஜ் என்கிற சீனு (24) நட்பாக பழகினார். 
இவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்துவந்தார்.

தியாகராஜ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார். 

அப்போது அவரை கட்டாயப் படுத்தி பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.

சிறையில் அடைப்பு

திடீரென அந்த சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர், சிறுமியிடம் இதுபற்றி விசாரித்தனர். அப்போது தியாகராஜ் பற்றி சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். 

இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல் இது பற்றி விசாரணை நடத்தி தியாகராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். 

போலீசார் தியாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings