டிட்லி புயல் - உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி !

0
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல் கடந்த 11-ம் தேதி, ஒடிசாவின் கோபால் பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப் பட்டினத்து க்கும் இடையே கரையைக் கடந்தது. 
இதை யடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. 

பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.


மழை வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை இன்று 52 ஆக அதிகரித் திருக்கும் நிலையில், 

வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கான நிதியை ரூ.4 லட்சத்தில் இருந்து 

10 லட்சமாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று உத்தர விட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)