பூண்டிலும் கலப்படமா? பாவம் விவசாயிகள் !

0
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விளைச்சல் அதிகரித்தும், விலை குறைந்துள்ள தால்
மலைபூண்டு பயிரிட்டுள்ள மலைவாழ் விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மேல்மலை, வில்பட்டி போன்ற

கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மலைபூண்டு சாகுபடி செய்யப் படுகிறது.

பொதுவாக கொடைக்கானல் மலைப்பூண்டு அதிகளவில் மருத்துவ குணம் கொண்டதால், 


வியாபாரிகளும் பொது மக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் வெண்மை நிறம் கொண்ட சைனா பூண்டை சிலர் மிகக் குறைந்த விலைக்கு 

வாங்கி வந்து சாய நீரில்முக்கி புகை போட்டு மிகக்குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.

இதனால் விளைச்சல் அதிகரித்தும் மலைப் பூண்டுக்கு உரிய விலை கிடைக்க வில்லை எனக் கூறும் விவசாயிகள், 

போலி மலைப்பூண்டு விற்பனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings