பணம் சம்பாதிக்கும் ஆசையில் 30 கொலை செய்த தையல்காரர் !

0
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் கம்ப்ரா என்பவர் தையல் காரராக பணிபுரிந்து வருகிறார். 
கடந்த வாரம் இவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இவர் அளித்த வாக்கு மூலம் காவல் துறையினரு க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த 8 ஆண்டு களில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

கொலை செய்யப் பட்டவர்கள் அனைவரும் நெடுஞ்சாலை களில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவி யாளர்கள் என்று தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 


அதிக பணம சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக கொலை செய்வதை பகுதி நேர வேலையாக செய்து வந்தேன். 

சரக்கு பொருட்களு டன் வரும் லாரிகளின் ஓட்டுந ர்களை கொன்று விட்டு அதில் இருக்கும் பொருட்களை திருடி விற்பது வழக்கம் என்று கூறியுள்ளார்.

இவர் காவல் துறையினரிடம் திருடனாக சிக்கியுள்ளார். கடந்த மாதம் 12ஆம் தேதி 50டன் இரும்பு கம்பிகளுடன் சென்ற லாரி மாயமாகியது. 

இது தொடர்பாக காவல் துறையினரு க்கு புகார் அளிக்கப் பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஆதேஷ் கம்ப்ரா சிக்கி உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)