கேரளம் மழை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த சம்பவங்கள் !

0
கேரள மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டு வருவதில் ராணுவமும், மீனவர்களும், தன்னார் வலர்களும் சிறப்பாக பணியாற்றி னார்கள்.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா எனப் பக்கத்து மாநிலங்கள் அனைத்தும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போலக் களமிறங்கி செயல்பட்டனர். 

நாடு முழுவதும் கேரள வெள்ளம் தொடர்பான செய்திகள் தலைப்புச் செய்தியானது. 

ஒட்டு மொத்த தேச மக்களும், வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் கரம்கோத்து செயல் பட்டதில் மீளத்து வங்கியுள்ளது கேரளா.

இந்த மீட்புப் பணிகளில் கேரள எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரி தூத்தூர் பகுதி மீனவர்களும் ஈடுபட்டிருந்தனர். 

நீரால் சூழப்பட்ட ஆலப்புழா மாவட்டத்தில் படகு வீடுகள் அதிகம் உண்டு. மீட்புப் பணிகளுக்குப் இங்குள்ள எக்கச்சக்க படகுகளை அனுப்பக் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அலங்கார படகுகள் சேதம் அடைந்து விடும் என்பதால் அதன் உரிமை யாளர்கள் மீட்புப் பணிகளுக்குப் படகுகளை அனுப்ப முன் வரவில்லை. 


இதைத் தொடர்ந்து அவர்களுடைய படகு வீடுகளுக்கான லைசென்ஸ் ரத்து செய்து கேரள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள்.

இது போன்று வெள்ளம் சூழ்ந்த தங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 

வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தவர்களும் உண்டு. 'உணவும், தண்ணீரும் கொண்டு வாருங்கள்.

நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று கூறிவிட்டு மீட்புப் பணிக்குச் சென்ற படகுகள், 

ஹெலிகாப்டர் களைத் திருப்பி அனுப்பிய சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்துள்ளன.
எர்ணாகுளம் பகுதியில் தன்னார் வலர்கள் மீட்புப் பணிக்குச் சென்ற போது இரண்டு மாடி வீட்டிற்குள் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இருந்திருக்கிறார். 

'உங்களை மீட்டு அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம், வீட்டில் நாற்காலி இருந்தால் கொடுங்கள்.

அதில் உங்களை உட்கார வைத்துத் தூக்கிச் செல்கிறோம்' என்று தன்னார் வலர்கள் அந்த மூதாட்டியிடம் கூறியிருக் கிறார்கள். 

அதற்கு அவரோ, 'முதலில் என் வீட்டில் இருக்கும் டி.வி.யை மேல் மாடியில் உயரமான இடத்தில் கொண்டு போய் வையுங்கள்.

பிறகு நாற்காலி தருகிறேன்' எனக் கூறி மூதாட்டி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். 

வெள்ளம் அதிகப்படியாகச் சூழ்ந்திருந்த போது அவசர அவசரமாக ஒரு வீட்டுக்குள் சென்று 'வெளியே வாருங்கள்' என மீட்புப் படையினர் கூறினார் களாம்.

அப்போது 'வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம், 

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள்' என அதிர்ச்சியளித் திருக்கிறார்கள் அவர்கள்.


செங்கனூர் எரமில்லகர பகுதியில் 'ஸ்ரீ அய்யப்பா நர்சிங் கல்லூரி' மாணவிகள் 15 பேர் ஹாஸ்டலில் சிக்கிக் கொண்டனர். 

அவர்களை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

ஹெலிகாப்டர் வந்து மீட்டுச் செல்வதால், மழை வெள்ளத்தால் பலம் இழந்து நிற்கும் வீடுகள் உடைந்து விழுந்து விடும் என்று கூறி 

அப்பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் மாணவிகளைத் தாக்கி யுள்ளனர்.

இது பற்றி மாணவிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

வீட்டு மாடியில் நின்றுகொண்டு ஓர் இளைஞன் சட்டையைக் கழற்றி ஹெலிகாப்டரை நோக்கிக் காட்டி யிருக்கிறார். 
அவர் ஆபத்தில் இருக்கிறார் என நினைத்து மீட்பதற்காக வீட்டிற்கு மேல் பறந்தபடி ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர் கயிறு மூலம் இறங்கி யிருக்கிறார்.

ராணுவவீரரும், ஹெலிகாப்டரும் தெரியும்படி செல்பி எடுத்துக் கொண்ட அந்த இளைஞன் மொபைலை பாக்கெட்டில் வைத்து விட்டு 'கை' அசைத்துத் 

திரும்பி சென்று விடுங்கள் என்று ராணுவ வீரர்களிடம் கூறியிருக்கிறான். இதுபற்றி வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் அந்த ராணுவ வீரர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings