பணிப்பெண்ணை அடித்து கொன்ற சகோதரிகள்... நாய் இறந்ததால் ஆத்திரம் !

0
சென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண் தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, 
பணிப்பெண்ணை அடித்து கொன்ற சகோதரிகள்... நாய் இறந்ததால் ஆத்திரம் !
சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப் பெண்ணும் கைதுச் செய்யப் பட்டனர்.

பெசன்ட் நகர், பெசன்ட் அவென்யூ சாலையில் வசிப்பவர் முருகானந்தம் (50). இவர் காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 

இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியை சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவர் கடந்த 10 ஆண்டு களாக பணிப் பெண்ணாக இருந்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம் மகாலட்சுமி திடீரென இறந்து விட்டதாக மருத்துவ மனைக்கும், போலீஸாரு க்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

சமபவ இடத்திற்கு சென்ற போலீஸாரிடம் மகாலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித் துள்ளனர்.

அப்போது மகா லட்சுமியின் உடல் முழுதும் தாக்கப்பட்ட ரத்தக் காயங்கள் மற்றும் தீயால் பாதிக்கப் பட்ட கொப்பளங்கள் இருந்துள்ளன. 
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மகா லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக ராயப்பேட்டை 

அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மகா லட்சுமியின் மரணத்தை சந்தேக வழக்காகவும் பதிவு செய்தனர்.

பணிப்பெண் மகாலட்சுமி யின் உடலில் எப்படி இத்தனை காயங்கள் வந்தது, உடல் முழுதும் தீக்காயம் எப்படி வந்தது என 

போலீஸார் தொழிலதிபர் முருகானந்தனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

முதலில் தற்கொலை, எனக்கு தெரியாது என மறுத்த முருகானந்தம், அவரது மனைவி, சகோதரி 

ஆகியோர் போலீஸாரின் கிடுக்கிப்பிடி கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர். இவ்வளவு காயம் எப்படி உடலில் எப்படி வந்தது, எந்த மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தீர்கள், 
உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்த நிலையில் மகாலட்சுமி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் படாமல் வீட்டிலேயே உயிரிழந்தது எப்படி என போலீஸார் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் போலீஸாரை திடுக்கிட வைத்தது. முருகானந்தம் மற்றும் அவரது மனைவி சுஷ்மிதா பிரியா(36) வெளி நாட்டிலிருந்து நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார். 

அந்த நாய் சமீபத்தில் இறந்துள்ளது. அதை மகாலட்சுமி அடித்துக் கொன்றதாக தெரிய வந்ததால் ஆத்திர மடைந்த சுஷ்மிதா, மகா லட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார். 

இடையில் சுஷ்மிதாவின் தங்கை மித்ராக்‌ஷி(32) என்பவர் வெளியூரில் இருந்து வந்துள்ளார். அவரும் சேர்ந்து பணிப்பெண் மகா லட்சுமியை தாக்கியுள்ளார்.

கண்காணிப்பு கேமராவை அணைத்து வைத்து விட்டு தோசைக் கரண்டியால் கடுமையாக தாக்கி யுள்ளனர். 

முருகானந்தம் காஞ்சி புரத்திலேயே தங்கி இருந்ததால் அவருக்கு இந்த விபரம் தெரிய வில்லை. வீட்டுக்குள் மகா லட்சுமியை அடைத்து வைத்து கடுமையாக தாக்கி யுள்ளனர். 
சுஷ்மிதாவின் தங்கை மித்ராக்‌ஷி கொதிக்க கொதிக்க வெந்நீரை மகா லட்சுமியின் கைக் கால்களில் ஊற்றி யுள்ளார்.

இதனால் உடல் வெந்து கொப்பளம் ஆகி மகாலட்சுமி துடித்ததா கவும், மகா லட்சுமியை மருத்துவ மனைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்த தாகவும் தெரிவித் துள்ளனர். 

மகா லட்சுமிக்கு கடுமையான தாக்குதல் காரணமாக வலிப்பு வந்துள்ளது. அப்போது தான் அவர்கள் தனது கணவர் முருகானந்த த்துக்கு தகவல் தெரிவித் துள்ளனர்.

மகாலட்சுமி உடல்நிலை மோச மானதைத் தொடர்ந்து மகா லட்சுமியை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றால் 

உண்மை தெரிந்து விடும் எனக்கருதி, முருகானந்த பிரபல மருத்துவ மனையில் தகவல் தெரிவித்து செவிலியரை வீட்டுக்கு அனுப்பி யுள்ளார்.
காலில் வெந்நீரைக் கொட்டி விட்டார் என அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். செவிலியர் இரண்டு நாள் பார்த்து விட்டு காயத்துக்கு மருந்து கொடுத்து விட்டு சென்றுள்ளார். 

அதன் பின்னர் கடுமையான உடல் நல பாதிப்பு காரணமாக மகாலட்சுமி 4-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

மகாலட்சுமி இறந்த விபரத்தை தனது கணவர் முருகானந்த த்திடம் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். அவர் உடனடி யாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். 
அதன் பின்னரே போலீஸார் வந்து உடலை கைப்பற்றி யுள்ளனர். மேற்கண்ட தகவலை மூவரும் வாக்கு மூலமாக கொடுத்துள்ளனர். 

இதை யடுத்து பணிப்பெண் மகா லட்சுமியை தாக்கி கொலை செய்த விவகாரத்தில் முருகானந்த த்தின் மனைவி சுஷ்மிதா பிரியா, அவரது தங்கை மித்ராக்‌ஷி இருவரையும் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings