கரூரில் லேசான நில அதிர்வு - மக்கள் பீதி !

0
கரூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு மக்களை பீதிக்குள்ளாக்கி யுள்ளது. 
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. 

இந்த பீதி அடங்கும் முன்பாக, சேலத்திலிருந்து 100 கி.மீ தொலைவிற் குள் உள்ள கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மதியம் நில நடுக்கம் உணரப் பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தின், வெள்ளியணை, சுக்காலியூர், வெங்கமேட்டில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக் கிறார்கள். 

பகல் 12.20 மணியளவில் பயங்கர சப்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்ட தாகவும், 

இதனால் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்று விட்டாதகவும் அச்சத்தோடு மக்கள் தெரிவிக்கிறார்கள். 

தமிழகத்தின் மையப் பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு சம்பவங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)