11 பேர் மர்ம மரணத்தில் எழும் சில கேள்விகள்... வீட்டின் பின்புறம் !

0
டெல்லியில் புராரி பகுதியில் பாவனேஷ் பாட்டியாவின் குடும்பத்தினர் 11 பேர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.
11 பேர் மர்ம மரணத்தில் எழும் சில கேள்விகள்... வீட்டின் பின்புறம் !
வீட்டிலிருந்த வயதான பெண்மணியின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்டிருக் கின்றனர்.

கூட்டு தற்கொலை என்பதை பாவனேஷின் உறவினர்களும் அவரது அண்டை வீட்டாருமே ஏற்க மறுக்கின்றனர். 

மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கமான குடும்பம், கடவுள் நம்பிக்கை நிறைந்த குடும்பம் என்று தான் எல்லோருமே கருத்து சொல்கிறார்கள். 

தவிர மூட நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு முக்தி அடைய தற்கொலை செய்யும் அளவுக்கு முட்டாள் தனம் கொண்டவர்கள் என யாரும் கூறவில்லை.
ஆனால், அந்த வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட சில குறிப்புகள் இவர்கள் மூட நம்பிக்கையைப் பின்பற்றி யிருக்கலாம் 

என்பதை உறுதி செய்யும் விதமாகவே இருக்கிறது. சொர்கத்தை அடையும் வழி என சில குறிப்புகளை அவர்கள் எழுதி வைத்திருக் கின்றனர்.

இந்நிலையில், இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக வீட்டின் பின்புறம் உள்ள சுவற்றில் 11 பைப்புகள் துருத்திக் கொண்டு இருக்கின்றன. 

அவற்றில் சில சிறியதாகவும் சில பைப்புகள் பெரிதாகவும் இருக்கின்றன. அருகருகே இருக்கின்றன. தண்ணீர், சாக்கடை வடிகாலுக்காக அமைக்கப் பட்டதாகத் தெரிய வில்லை.
இந்த பைப்புகள் அந்தக் குடும்பத்தினர் மூட நம்பிக்கையைக் கடை பிடித்ததற்கான ஆதாரங்களை வலுப்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings