காதலிக்க மறுத்த பெண்ணை படுகொலை செய்த தெலங்கானா இளைஞர் | Telangana youth who killed a woman who refused to love !

0
காதலிக்க மறுத்த இளம் பெண்ணை பட்டப் பகலில் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞரை பொது மக்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத் தனர்.
தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், ராமகுண்டம் பகுதியை சேர்ந்தவர் ரகக்ஞா (22). பட்ட தாரியான இவர், 

கரீம் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள ‘மீ சேவா’ அலுவலக த்தில் கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வந்தார். 

இவரை ராமகுண்டம் மார்க்கண்டேய நகரை சேர்ந்த வம்சிதர் (25) என்ற இளைஞர் கடந்த 3 ஆண்டு களாக ஒரு தலைப் பட்சமாக காதலித்து வந்துள்ளார். 

இவரது காதலை ரகக்ஞா ஏற்க மறுத்துள்ளார். இந்நிலை யில், நேற்று காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்த 

வம்சிதர், ரகக்ஞா விடம் தன்னை காதலிக்க முடியுமா ? இல்லையா ? என கூச்சல் போட்டுள்ளார். 


இதனால் வெளியே போய் பேசிக் கொள்ளலாம் என ரகக்ஞா கூறி, அவரை அழைத்துச் சென்றார். அங்கு இருவரு க்கும் தீவிர வாக்கு வாதம் ஏற்பட் டுள்ளது. 

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வம்சிதர், கத்தியால், ரகக்ஞாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார். 

இதனைக் கண்ட அப்பகுதி யினர் வம்சிதரை அடித்து, உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். 

உயிருக்கு போராடிய ரகக்ஞாவை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கரீம்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வம்சிதரையும் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings