இரட்டையர்களை கொலை செய்த தாய் மாமா... உருக்கம் !

0
மனவளர்ச்சி குன்றிய இரட்டைக் குழந்தைகளை வளர்க்க முடியாமல், தங்கை அனுபவிக்கும் வேதனையைப் பார்க்க முடியாமல், தாய் மாமா இரு பிள்ளை களையும் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடுமை நடந்துள்ளது.
இரட்டையர்களை கொலை செய்த தாய் மாமா... உருக்கம் !
தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ரெட்டி. இவரின் சகோதரி லட்சுமி, இவரின் கணவர் சீனிவாச ரெட்டி. இவர்கள் ஹைதராபாத்தில் வசிக்கின்றனர். 

இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தை ஆண், மற்றொன்று பெண் குழந்தை யாகும். பிறக்கும் போதே இரு குழந்தைகளும் வாய்பேச முடியாமல், மன வளர்ச்சி குன்றிப் பிறந்தன.

இதில் ஆண் குழந்தைக்கு விஷ்ணு வர்தன் ரெட்டியும் (வயது12), பெண் குழந்தைக்கு சிறீஜனா ரெட்டி(வயது12) என்றும் பெயரிட்டனர். 

இவர்களைச் சிறுவயதில் இருந்து வளர்க்கப் பெற்றோர் லட்சுமியும், அவரின் கணவரும் மிகவும் சிரமப் பட்டதால், தாய்மாமன் மல்லிகார்ஜுன ரெட்டி வளர்த்து வந்தார்.

தனது தங்கைக்கு பிறந்த இரட்டை குழந்தை களும் மன வளர்ச்சி குன்றிப் பிறந்து விட்டது கண்டு மல்லிகார்ஜுன ரெட்டி மிகுந்த மன வேதனையில் வாழ்ந்து வந்தார். 

இந்த இரு குழந்தை களையும் வளர்க்க முடியாமல் தனது தங்கை லட்சுமி படும் மன வேதனை யையும், மன வருத்தத்தை யும் கண்டு வேதனை யடைந்தார்.
இந்த இரு குழந்தை களையும் 12வயது வரை வளர்த்து விட்டனர். ஆனால், அதன்பின் இவர்களை வளர்ப்ப திலும், வெளியே அழைத்துச் செல்வதிலும் பெற்றோர் மிகுந்த சிரமப் பட்டனர், பல்வேறு சிரமங் களையும் எதிர் கொண்டனர்.

இந்த நிலையைப் பார்த்த மல்லிகார்ஜுன ரெட்டி நேற்று நண்பகலு க்கு மேல் தனது ஹைதரா பாத்தில் உள்ள தங்கையின் வீட்டுக்குச் சென்று விஷ்ணு வர்தன் ரெட்டிக்கும், சிறீஜனா ரெட்டிக்கும் 

நீச்சல் கற்றுக் கொடுக்க அழைத்துச் செல்வ தாகக் கூறி தனது காரில் நல்கொண் டாவுக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், நீச்சல் கற்றுக் கொடுப்பதற் காக பதிலாக, நல்கொண்டா சைதன்ய புரியில் உள்ள தனது வீட்டுக்கு இருவரையும் மல்லிகார்ஜுன ரெட்டி அழைத்து வந்தார். 

மன வளர்ச்சி குன்றிய இந்த இரு பிள்ளை களையும் வளர்க்க தனது தங்கை அடையும் வேதனையை எண்ணி, மன வேதனை யுடனே இருந்துள்ளார்.

மனதை கல்லாக்கிக் கொண்டு வேறுவழியின்றி இரு குழந்தை களையும் கழுத்தை நெறித்து மல்லிகார்ஜுன ரெட்டி கொலை செய்து இருக்கிறார்.
அதன்பின் இன்று அதிகாலை யில், காரில் இரு பிள்ளை களையும் ஏற்றும் போது, மல்லிகார்ஜுன ரெட்டி வசிக்கும் வீட்டின் உரிமையாளர் இதைப் பார்த்து விட்டு போலீஸு க்கு தகவல் அளித்தார். 

அங்கு வந்த போலீஸார் இந்த இரட்டையர் சிறுவர், சிறுமியின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டையர்களைக் கொலை செய்ய மல்லிகார்ஜூன ரெட்டிக்கு உதவிய கார் டிரைவர் விவேக் ரெட்டி, அவரின் நண்பர் வெங்கட்ரமண ரெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மல்லிகார்ஜுன ரெட்டியிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணை யில், மனவளர்ச்சி குன்றிய குழந்தை களை வளர்க்க முடியாமல், 

நாள் தோறும் தனது தங்கை அடையும் வேதனையைப் பார்த்து பொறுக்க முடியாமல், இரு குழந்தை களையும் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித் துள்ளார் என போலீஸார் தரப்பில் கூறப்படு கிறது.
ஆனால், இந்தச் சம்பவம் குறித்து மல்லிகார்ஜுன ரெட்டியின் சகோதரி லட்சுமி க்கும் அவரின் கணவரு க்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. 

அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால், தனது சகோதரர் மல்லிகார்ஜுன ரெட்டி மீது லட்சுமியும், அவரின் கணவரும் எந்த விதமான புகாரும் கொடுக்க வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)