பிரதமர் பொது கூட்டத்தில் குண்டு வெடிப்பு !

0
எத்தியோப்பியா பிரதமருக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பேரணியின் மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் பொது கூட்டத்தில் குண்டு வெடிப்பு !
எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். 

இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் இன்று பல்லா யிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

பேரணி முடிவில் மக்களிடையே உரை யாற்றிய பிரதமர் அபிய் அஹமத், விடை பெற்று செல்ல ஆதரவாளர் களை நோக்கி கையை அசைத்தார். 

மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்பு வதற்காக கைகளை அசைத்து விடை யளித்தனர். அப்போது, மக்கள் கூட்டத்துக் கிடையில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. 

இதனால் பதற்ற மடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் காயங்க ளின்றி உயிர் தப்பிய பிரதமர் பின்னர் தொலைக் காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.
இந்த தாக்குதல் திட்ட மிட்டு நடத்தப் பட்ட சதி என்று குறிப்பிட்ட அவர், இதில் சிலர் பலியாகி யுள்ளதாக வும் குறிப்பிட்டார்.

உள்ளூர் ஊடகங்கள் வெளி யிட்டுள்ள தகவலின் படி, போலீஸ் வாகனத்தின் மீது சில மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்திய தாகவும், இதில் சிலர் காயமடைந்த தாகவும் தெரிய வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings